“வணக்கம் சார்” “எல்லாருக்கும் கல்வி வளர்ச்சி நாள் வணக்கம்..
இன்னிக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு தயாரா வந்துருக்கீங்க போலருக்கே” ஆமா, சார்..
அதுக்குதான் படிச்சுகிட்டுஇருக்கோம்..
அய்யா காமராஜர் பிறந்த நாள்குறதுனால
அவரப் பத்தி கட்டுரை,
பேச்சுப்போட்டிலாம் இருக்குதே “சரி/ படிங்க நான் அப்புறம் வர்றேன்” “சார்.. சார்..
இருங்க..
நாங்க உங்ககிட்ட கொஞ்சம் கேக்கணும்”
“கேளுங்க” “இன்னிக்கு உங்கள காமராஜரப் பத்தி கட்டுரை எழுதச் சொன்னா என்ன எழுதுவீங்க..
நீங்க அடிக்கடி சொல்வீங்கள்ல…
விடை எழுதுறப்ப அல்லது பேசுறப்ப, புதுசா ரெண்டு விஷயத்த சேத்துக்கணும்னு சொல்வீங்களே” “முதல்ல ஒரு கேள்வி கேக்கட்டுமா?” “அதில்லாம நீங்க எதுவுமே தொடங்க மாட்டீங்களே சார்” “காமராஜர் எந்த ஊர்ல பிறந்தார்..?” “அத்தனை வாய்களும் திறந்தன “விருதுநகர்”” எப்போதும் தோள்களைக் குலுக்காத ஆசிரியர்,
இன்று “இல்லை” என்று தலையாட்டியதோடு அதையும் செய்தார். ஒரு மாணவி மட்டும், “ஏதாவது ஒரு பொடி வெச்சுருக்கீங்க போலருக்கு, சார்… பாடப்புத்தகத் துலயே விருதுநகர்னுதான் போட்டுருக்கு.. அவரோட விருதுநகர் இல்லத்த நினைவு இல்லமா அரசு மாத்தியிருக்கு”
“அதெல்லாம் சரிதான்…
ஆனா அவர் பொறந்தப்ப அந்த ஊருக்குப் பேரு விருதுநகர் இல்ல”
முன்வரிசையில் இருந்த மாணவி, “விருதுபட்டி” என்றார். “சார்..
அந்தப் பொண்ணு அந்த ஊருதான் சார்” என்று சிலர் வேகமாகச் சொன்னார்கள்.
சிலர், தாங்கள் எழுதியிருந்த குறிப்பில் விருதுநகரை அடித்து விட்டு விருதுபட்டி என்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.
“இதத்தான் நீங்க எழுதுவீங்களா, சார்.
.” “இல்ல… அவரு முதலமைச்சரா ஆனப்ப தமிழ் நாட்டுல 19,24,874 மாணவர்கள் தொடக்கப்பள்ளிகள்ல இருந்தாங்க…
எட்டு வருஷத்துல ரெண்டு மடங்கா மாறுச்சு”
“மதிய உணவுத்திட்டத்துனாலதான சார்” “இல்ல..
ரெண்டு மடங்கு ஆனப்பிறகுதான் மதிய உணவுத்திட்டமே வருது”
“அப்புறம் எப்புடி சார்..?” “சார்..
நான் நேத்து ஒரு புக்ல படிச்சேன்.. ராஜாஜி 6 ஆயிரம் பள்ளிக்கூடத்த மூடியிருந்தாரு…
இவரு வந்து அதெல்லாம் திறந்தாரு..
அதோட இன்னும் 6 ஆயிரம் பள்ளிக்கூடத்தத் திறந்தாரு…
சரிதான சார்..” “சரிதான்…
அத எப்புடிப் பண்ணுனாங்கனா..
500 பேர் வசிக்குற ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக் கூடம்னு திறந்தாங்க..
தூரமும் ஒரு பிரச்சனைதான” “ஆமா சார்…
நம்ம பள்ளில எட்டு வரைக்கும்தான் இருக்கு.. ஒன்பதாம் வகுப்புக்கு தள்ளிதான போகணும்…
போன வருஷம் நம்ம பள்ளில படிச்ச ரெண்டு அக்கா படிப்பையே நிறுத்திட்டாங்க” “இப்பவே இப்புடி இருக்குனா…
அப்போ எப்புடி இருந்துருக்கும்.. உயர்நிலைப்பள்ளிகளோட எண்ணிக்கையையும் அவர் அதிகப்படுத்துனாரு”
“அதான் இன்னிக்கு கல்வி வளர்ச்சி நாள்னு கொண்டாடுறோமா சார்” “ஆமாம்…
உயர்கல்விக்கு போறதுலயும் நாம நல்லா முன்னேறிருக்கோம்…
நம்ம அளவுக்கு மத்த மாநிலங்கள்லாம் முன்னேறல.. கொரோனா காலத்துல கொஞ்சம் குறைஞ்சுது.. பள்ளிப்படி,பபு முடிச்சு உயர்கல்விக்குப் போறதுல தமிழ்நாடு கிட்டத்தட்ட 50 விழுக்காடு வெச்சுருக்கு…
தேசிய சராசரி வெறும் 27 விழுக்காடுதான்”
“ஆனா, நாம இன்னிக்கு நிலாவுக்கு போயிட்டு இருக்கோம், சார்.
” மற்றொரு மாணவி, “ஆமா சார்… சந்திரயான்-3 வெற்றினு டி.வி.ல பாத்தேன் சார்..
எங்கப்பா மொபைல்ல ஒரு வீடியோவும் வந்துருந்துது…
10, 9, 8, …… 1னு சொல்லவுடன அப்புடியே நெருப்போட மேல கிளம்பிப் போச்சு”
“ரொம்பச் சரியாச் சொன்னீங்க.. ஆனா இப்போ அத அப்புடியே 1, 2, 3, ….. 10னு திருப்பிச் சொல்லணும்”
“எதுக்கு சார்..?” “நாம அனுப்பிருக்குற விண்கலம் நிலாவுல இறங்குறதுக்கு பத்து கட்டம் இருக்கு”
“அப்போ வெற்றினு சொன்னது..?”
“ஏவுறதுல ஜெயிச்சுட்டோம்…
போன முறை, அதான் சந்திரயான்-2ல,
எட்டாவது கட்டத்துல இருந்து ஒன்பதுலதான் தோத்துட்டோம்..
அந்த அனுபவத்துல இருந்து நம்ம விஞ்ஞானிகள் மேம்படுத்திருக்காங்க”
“இப்போ ஜெயிப்போமா சார்.” “ஒவ்வொரு கட்டமும் வெற்றிதான்”
“எப்போ தெரியும் சார்” “சில நாட்கள்ல தெரியலாம்”
மதிய உணவுக்கான மணியடித்தது.
சத்துணவு சாப்பிடக் கிளம்பினர் மாணவர்கள்.